Published : 04 Nov 2022 03:50 PM
Last Updated : 04 Nov 2022 03:50 PM

கர்நாடகாவில் இரட்டைக் குழந்தைகளுடன் தமிழ்ப் பெண் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது அண்ணாமலை காட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்

சென்னை: “ஆதார் இல்லாதாதல் பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், தமிழகத்தைச் சேர்ந்த பெண், இரட்டை குழந்தைகளுடன் மரணம் அடைந்த சம்பவத்தில் அனைத்து ஊழியர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது.

தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x