Published : 20 Nov 2016 09:59 AM
Last Updated : 20 Nov 2016 09:59 AM

காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 500, 1000 நோட்டுகள் கொள்ளை: வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

பல்லாவரத்தில் காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளை யடிக்கப்பட்டன.

சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் வங்கி கிளை ஒன்று உள்ளது. அதில், லோகேஸ்வர ராவ் என்பவர் மேலாளராக உள்ளார். இளங்கோவன் என்பவர் காசாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மீனம்பாக்கத்துக்கு காரில் எடுத்து சென்றார்.

ஜமீன் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் காரை திடீரென வழிமறித்தனர். இளங்கோவனை தாக்கிய அவர்கள் ரூ.25 லட்சத்தை பறித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த அவர், சாஸ்திரி நகரில் உள்ள தனது வங்கி கிளைக்கு இரவோடு இரவாக வந்து அங்கிருந்தவாறே ஆலோசனை நடத்தினார்.

அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸார், நள்ளிரவில் வங்கிக் கிளை திறந்திருப்பதை பார்த்து உள்ளே சென்று விசாரித்தனர். அப்போது காரில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது போலீஸாருக்கு தெரியவந்தது. பொதுவாக வங்கி அதிகாரிகள் காவலர்களுடன் சென்றுதான் பணத்தை மாற்றுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் இளங்கோவன் தனது கார் டிரைவர் சக்திவேல் என்பவருடன் சென்று பழைய பணத்தை மாற்ற முயன்றுள்ளார். இதனால் கொள்ளைபோனது கறுப்பு பணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x