Published : 14 Jul 2014 10:42 AM
Last Updated : 14 Jul 2014 10:42 AM

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.50 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தைக் கடத்திவந்த 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த ராமன் (41) என்பவரது சூட்கேசின் ரகசிய அறையில் 5 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதே போல கொழும்பில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் ஞாயிற்றுக்கிழமை நடந்த சோதனையில் கொழும்புவை சேர்ந்த முகமது (30), காசீம் (35) ஆகியோரிடம் இருந்து 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் டீத்தூள் பாக்கெட்டுகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.

தங்க கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2.50 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x