Published : 23 Sep 2022 06:12 AM
Last Updated : 23 Sep 2022 06:12 AM

முதல்வர் குறித்து சர்ச்சை போஸ்டர்: அண்ணாமலை உதவியாளர் கைது

சென்னை: வட சென்னையில் பல பகுதியில் கடந்த 11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி 5-வது மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ஆகியோர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ், இந்து அமைப்பு ஒன்றின் மாநகர செயலாளராக உள்ள சத்தியநாதன், சிவகுருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரான சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (37) கைது செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x