Published : 22 Sep 2022 04:14 AM
Last Updated : 22 Sep 2022 04:14 AM

வேலூரில் நாளை ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு

வேலூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில மாநாடு நாளை(செப்.23) வேலூரில் நடைபெறவுள்ளது என சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ரவி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சங்கத்தின் 2-ம் மாநில மாநாடு வேலூர் தொரப்பாடி அழகாம்பாள் கிருஷ்ணசாமி முதலியார் திருமண மண்டபத்தில் நாளை (செப்.23) நடக்கிறது. இதில், மாநிலம் முழுவதுமிருந்து ஓய்வூதியர்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் இயக்குநர் முதல், இரவு காவலர் வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாக கொண்ட இந்த சங்கத்தின் மாநில மாநாட்டில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், வேலூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்பர்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x