Published : 20 Nov 2016 10:27 AM
Last Updated : 20 Nov 2016 10:27 AM

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு பிரச்சினையால் ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று அதிகாலை 600-க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே சனிக்கிழமை மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த சேகர் பாண்டியன், கிருஷ்ணன் ஆகி யோருக்குச் சொந்தமான படகில் இருந்த 11 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

டெல்லியில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற இருநாட்டு மீனவப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடை பெறும் முதல் மீனவர் சிறைபிடிப்பு இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x