Published : 12 Oct 2016 08:53 AM
Last Updated : 12 Oct 2016 08:53 AM

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்திப் பெற்றது. 14 கி.மீ தொலைவு கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, சென்னை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அக்டோபர் மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வரும் 15-ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கி மறுநாள் (16-ம் தேதி) காலை 10.54 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x