Published : 27 Oct 2016 08:50 AM
Last Updated : 27 Oct 2016 08:50 AM
18 நிபுணர்களைக் கொண்ட பேரிடர் மேலாண்மை ஆலோ சனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.
வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்ய கோபாலை தலைவராகவும், வருவாய்த் துறை செயலர் பி.சந்திர மோகனை துணைத் தலை வராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் அண்ணா பல்கலை. பேராசிரியர் திருமலை வாசன், ஐஐடி சென்னையின் பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச் சந்திரன், திருச்சி என்ஐடி பேரா சிரியர் மோசஸ் சாந்தகுமார், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் முரளி தர் ராவ், சென்னை மாநக ராட்சி சுகாதார அதிகாரி பி.குக நாதன் உள்ளிட்ட 18 நிபுணர் கள் இடம் பெற்றுள்ளனர்.
குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து, இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT