Published : 03 May 2016 10:14 AM
Last Updated : 03 May 2016 10:14 AM

விபத்தில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகளை சந்தித்து நலம் விசாரித்தார் விஜயகாந்த்

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் விசாரித்தார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, மாநில துணைத் தலைவர் சுரேந் திரன் ஆகியோர் கடந்த 27-ம் தேதி இரவு மதுரையிலிருந்து காரில் வந்துகொண்டிருந்தனர். துவரங்குறிச்சி அருகே புழுதி பட்டி என்ற இடத்தில் ஒரு லாரி மீது கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த மோகன்ராஜுலு, சுரேந்தர், தனி பாதுகாவலர் பாண்டியன், கார் டிரைவர் விவேக் ஆகியோர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இவர்களில் மோகன் ராஜுலு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், பாஜக தேசியச் செயலாளர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மோகன்ராஜுலுவைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், புதுக் கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்று மதியம் திருச்சிக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திடீரென தனியார் மருத்துவமனைக்குச் சென்று மோகன்ராஜுலு, சுரேந்தி ரன் ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, விரைவில் குணமடைய கடவுளி டம் வேண்டிக் கொள்வதாக விஜயகாந்த் ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x