Published : 07 May 2016 09:13 AM
Last Updated : 07 May 2016 09:13 AM

கட்சி தலைவர்களுக்கு வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:

காட்டுமன்னார்கோவில் தொகுதி யில் போட்டியிடும் திருமாவளவன், சாவடிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் திருமாவள வனின் கார் கண்ணாடி உடைந் துள்ளது. டிராக்டரில் வந்த அந்த 12 பேர் கொண்ட கும்பலை காவல் துறை விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளது. அவர்கள் வந்த வாகனத்திலிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள் ளன. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இந்த சம்பவத்தில் திருமாவளவன் பொறுப்புணர்வோடும், சகிப்புத் தன்மையுடனும் இருந்திருக்கிறார். விசிகவினரும் இவ்விஷயத்தில் கட்டுப்பாடு காத்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த சூழலில், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தங்கள் தொண்டர்களை மிகுந்த பொறுப் புணர்வோடு வழி நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. காட்டு மன்னார்கோவிலில் திருமாவள வனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x