Published : 29 May 2016 11:01 AM
Last Updated : 29 May 2016 11:01 AM

வாழப்பாடி அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி; 3 பேர் காயம்

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மகன் விஸ்வநாதன்(12). சுரேஷின் நண்பர்கள் சிவராமன்(35), அருள்(40) மற்றும் விஜயகுமார்(35) ஆகிய 5 பேரும் காரில் நேற்று சேலம் நோக்கி வந்தனர். காரை புதுச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் திருநாராயணன்(40) ஓட்டி வந்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்துள்ள புதிய கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கார் வந்தபோது, எதிரில் வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கல்லேரிப்பட்டியைச் சேர்ந்த சாருஹாசன்(22) மற்றும் ஆனந்தபாபு(30) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

இதில், கார் ஓட்டுநர் திருநாராயணன் மற்றும் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். வழியில் சாருஹாசன், ஆனந்தபாபு ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த விஸ்வநாதன், அருள், விஜயகுமார், சிவராமன் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதில், விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x