Published : 31 May 2016 09:17 AM
Last Updated : 31 May 2016 09:17 AM
தமிழக சட்டப்பேரவை நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்த நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை ஆளுநர் கே.ரோசய்யா மீண்டும் நியமித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தின் 20-வது முதல் வராக ஜெயலலிதா பதவி யேற்றுள்ளார். சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்தியன் பிரிவைச் சேர்ந்த ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸை சட்டப்பேரவையின் 235-வது உறுப்பினராக நியமித்து ஆளுநர் கே.ரோசய்யா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அகில இந்திய ஆங்கிலோ இந்தியன் சங்க மதுரை கிளையின் தலைவராக உள்ள நான்சி, 1955-ம் ஆண்டு பிறந்தவர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழை ஆகும். எம்பிபிஎஸ் படித்து மருத்துவராக பணி யாற்றி வரும் நான்சி, கடந்த 14-வது சட்டப்பேரவையிலும் நியமன உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT