Published : 14 Jun 2022 03:01 PM
Last Updated : 14 Jun 2022 03:01 PM

சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதி, மதம் உட்பட எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உலக ரத்த தான தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்!

சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x