Published : 12 May 2016 09:47 AM
Last Updated : 12 May 2016 09:47 AM
அண்ணா வஉசி கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் சுப்பையா, மாநில அமைப்புச் செயலாளர் ரவி ஆகியோர் திருச்சியில் நேற்று நிருபர் களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள வேளாளர், முதலியார், செங் குந்த முதலியார் ஆகிய சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்மையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆதரிப் பது என்றும், திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT