Published : 15 May 2016 10:50 AM
Last Updated : 15 May 2016 10:50 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் அ.சவுந் தரராஜனை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரைய்யா நேற்று தேர்தல் பிரச்சார நிறைவு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி புரிந்து பல்வேறு சாதனைகளை புரிந்ததாக கூறுகின்றன. ஆனால், அந்த 2 கட்சிகள் மீதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் கிரானைட் ஊழல், தாது மணல் ஊழல் நடைபெற்றது. ஆனால், அவற்றை நாட்டுமையாக்க அக்கட்சிகள் மறுக்கின்றன.
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கிரானைட், தாதுமணல் ஆகியவை நாட்டுடமையாக்கப்படும். லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி அமைக் கப்படும். அரசு நிர்வாகத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்காது. அரசு ஊழியர்களும் எவ்வித சிபாரிசு மின்றி நேர்மையாக தேர்வு செய்யப்படுவர்.
தேர்தல் ஆணையம் கோடிக்கணக் கான பணத்தை திமுக, அதிமுக வினரிடமிருந்து பறிமுதல் செய்து வருகிறது. ஆனால், இதுவரை எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 6 கட்சி களிடமிருந்து கைப்பற்றப்படவில்லை. எங்கள் கூட்டணிக் கட்சியினர் யாரும் கைதும் செய்யப்படவில்லை. இதன் மூலம் பரிசுத்தமான கூட்டணியாக இது அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT