Published : 11 May 2016 09:14 AM
Last Updated : 11 May 2016 09:14 AM

ரூ.9 லட்சம் பறிமுதல்: சரத்குமார் மீது வழக்கு பதிவு

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சரத்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 லட்சம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமக தலைவர் ஆர்.சரத்குமாரிடம் கடந்த 7-ம் தேதி பறக்கும்படை அதிகாரிகளால் ரூ. 9 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்பாளரை பொறுத்தவரை தேர்தல் செலவுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வைத்திருக்க முடியும். அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் காசோலை மூலமாகவே இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

விதிகளை மீறி சரத்குமார் பணம் வைத்திருந்ததாக பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு, ஆறுமுகநேரி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் சரத்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 171 (எச்)-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x