Published : 08 May 2016 11:00 AM
Last Updated : 08 May 2016 11:00 AM
ஸ்கூட்டர், டிவி, செல்போன் தருவதாக கூறும் அதிமுக, திமுக ஏழை மக்களுக்கு வீடு, நிலம் அளிப்போம் என வாக்குறுதி அளிப்பார்களா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் திரிபுரா மாநில முதல்வருமான மாணிக் சர்க்கார் கேள்வி எழுப்பினார்.
தஞ்சை மாவட்டத்தில் தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவையாறில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறை யாக 6 கட்சிகளைக் கொண்ட மூன்றாவது மாற்று அணி உருவாகியுள்ளது. இந்த அணி வெற்றிபெற்றால், இதற்கு நீங்கள் வாக்களித்தால், தமிழகம் முன்னேறும். திமுக, அதிமுக தமிழ கத்தைச் சீரழித்துவிட்டன. பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக வும், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலை யில்லா இளைஞர்கள், சிறு - நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படும் இவர்கள், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
மத்தியில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், ஊழல், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை போன்ற காரணங்களுக்காக அகற்றப் பட்டது. மாற்றாக, நல்ல நாட்கள் வரப்போகிறது என்று சொல்லி வந்த மோடி ஆட்சியிலும், விலைவாசி உயர்ந்து வருகிறது. லஞ்ச ஊழலை வேரோடு வெட்டியெறிவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் மீதும், பாஜகவின் 3 முதல்வர்கள் மீதும் பல ஆயிரம் கோடியை சுருட்டியதாக ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இவற்றுடன் கூட்டு வைத்து செயல்படும் திமுக மற்றும் அதிமுகவும் அகற்றப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் செல்போன், ஸ்கூட்டர், டி.வி. தருவதாக வாக்குறுதி அளிக்கும் இவர்கள், நிலம் இல்லாதவர் களுக்கு நிலம், வீடு இல்லாத வர்களுக்கு வீடு, வேலை இல்லாதவர்களுக்கு வேலை தருவதாக உறுதியளிக்கத் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT