Published : 10 May 2016 08:36 AM
Last Updated : 10 May 2016 08:36 AM

பால் உற்பத்தியாளர்கள் திமுகவுக்கு ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் நலச் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது.

பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான, பால் உற்பத்தியாளர்கள் கொண்டுவரும் பால் முழுவதையும் கூட்டுறவு சங்கமே பெற்றுக்கொள்ள வேண்டும். சத்துணவில் பால் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x