Published : 14 May 2016 08:34 AM
Last Updated : 14 May 2016 08:34 AM
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் 1,355 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் நேர்காணலுக்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பங்கேற்கலாம். இதற்கான, ஆன்லைன் முன்பதிவு மே 17-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த சிறப்பு மேளாவில் தத்கால் முறையில் விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த சிறப்பு மேளா மூலம் சுமார் 2000 விண்ணப்பதாரர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT