Published : 14 May 2016 09:05 AM
Last Updated : 14 May 2016 09:05 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்கள் கூட்டணியினர் மக்களை நம்பி, அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம். 50 ஆண்டுகளுக்குப் பிறகாவது கொள்கையுடன் கூடிய ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இதுவரை ஆட்சியில் இருந்தபோது செய்யாததை, இனி வாய்ப்பு கொடுத்தால் செய்வேன் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
மதுவை ஒழிக்க தமிழகத்தில் குரல் கொடுக்கும் பாஜக, நாடு முழுவதும் மதுவிலக்கை ஏன் அமல்படுத்தவில்லை? கர்நாடகத் தில் காங்கிரஸ் ஏன் அமல்படுத்த வில்லை?. பாஜக குறித்து திமுக, அதிமுக விமர்சிப்பதில்லை. பாஜக வின் குற்றச்சாட்டுக்கு அதிமுக பதில் தரவில்லை. இதன் மூலம் இருவருக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT