Published : 04 May 2016 09:39 AM
Last Updated : 04 May 2016 09:39 AM

சென்னை, மதுரை, கோவை நகரங்களில் வரும் 7-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்: இளங்கோவன் தகவல்

தமிழக தேர்தல் பிரச்சாரத்துக் காக சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 இடங்களில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் காங் கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

கோவை வ.உ.சி. மைதானத் தில் பொதுக்கூட்டம் நடத்து வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று வந்த அவர் நிருர்களிடம் கூறிய தாவது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற் கொள்ள வரும் 7-ம் தேதி வருகிறார். மதுரை, கோவை, சென்னை மதுரவாயல் ஆகிய மூன்று இடங்களில் பொதுக் கூட்டங்களில் ராகுல்காந்தி பேச உள்ளார்.

நான், தமிழகம் முழு வதும் சுற்று பயணம் மேற் கொண்டு வருவதை வைத்து சொல்கிறேன், திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தென்படுகிறது. பலவீனமாக இருப்பதாக நினைத்த தொகுதிகள் கூட வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. நாங்கள், 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளி யிடப்படும் கருத்துக் கணிப்பு களை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை.

தமிழக காவல்துறை பார பட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநியாயம், அட்டூழியம் செய்தவர்களின் பட்டியலை தேர்தல் ஆணை யத்தில் கொடுத்ததன்பேரில் அதிகாரிகளை மாற்றி இருக் கின்றனர்.

தவ வாழ்க்கை வாழ்வதாக சொல்லும் ஜெயலலிதா, சென்னையில் அமர்ந்து கொண்டு இருப்பதை விட இமயமலைக்கு சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டால் அவருக்கும் நல்லது. இதனால், மக்களுக்கும் விடுதலை கிடைக்கும். தேர்தல் நேரத்தில் திசை திருப்பவே காங்கிரஸ் மீது ஹெலிகாப்டர் ஊழல் குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x