Published : 09 May 2016 09:30 AM
Last Updated : 09 May 2016 09:30 AM
நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாமக வேட்பாளர்களை ஆதரித்து உதகையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தயாநிதியை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறார் கருணாநிதி. ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஜாமீனில்தான் வெளியில் உள்ளனர். மது ஒழிப்புக்காக 35 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. பணப்பட்டுவாடாவை, சென்னையில் திமுக, அதிமுகவினர் தொடங்கிவிட்டனர். அதிமுக பிரமுகர்கள் மற்றும் பினாமிகள் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT