Published : 11 May 2016 09:37 AM
Last Updated : 11 May 2016 09:37 AM
நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேதரத்தினம் உட்பட பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 18 வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 4.30 மணிக்கு வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேத்தாக் குடிக்கு மாலை 4.25 மணிக்கு வருகிறார். ஹெலிகாப்டர் இறங்க மேடையருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு பேச்சை முடித்துக் கொண்டு, 5.10-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சை செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலத்துக்குச் செல்கிறார்.
பிரதமரின் வருகையை யொட்டி, வேதாரண்யம் பகுதி யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பிரதம ரின் சிறப்பு பாதுகாப்பு அதி காரிகளும் வேதாரண்யத்துக்கு வந்து பாதுகாப்பு முன்னேற்பாடு களை கவனித்து வருகின்றனர்.
கடற்கரைப் பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, தோப்புத் துறை, வேதாரண்யம், கோடியக் கரை உள்ளிட்ட இடங்கள் கண் காணிக்கப்பட்டு வருகின்றன. போலீஸார் வாகனச் சோதனை யிலும் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT