Published : 12 May 2016 09:45 AM
Last Updated : 12 May 2016 09:45 AM

சென்னையில் அதிரடி சோதனை: திமுக பிரமுகரின் மகன் வீட்டில் ரூ.1.5 கோடி சிக்கியது

ஆழ்வார்பேட்டையில் திமுக பிரமுகரின் மகன் வீட்டில் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.1.5 கோடியை பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார். கரூரில் அவருக்கு சொந்தமாக உள்ள லாட்ஜில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சிவராமன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பணம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாத தால் அவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்து கொண்டு சென்ற னர்.

மேலும், அவர் வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகப் படுகின்றனர். இதுகுறித்த விசார ணையும் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x