Published : 02 Apr 2016 09:52 AM
Last Updated : 02 Apr 2016 09:52 AM
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கூடூர் மார்க்கத்தில் எண்ணூர் மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி (நேற்று) தொடங்கி 6-ம் தேதி வரை நடக்கிறது. இப்பணிகள் நள்ளிரவு 12.20 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் நடக்க உள்ளன.
எனவே, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவையும், கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT