Published : 30 Apr 2016 12:18 PM
Last Updated : 30 Apr 2016 12:18 PM

தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

கரூர், திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியராக காக்கர்லா உஷாவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராஜா பூஜா குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக சமயமூர்த்தியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக ஸ்வர்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஏடிஜிபி கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை ஈரோடு மாவட்ட எஸ்.பி.க்கள் இருவர் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக சுதாகரும், ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக ரூபேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x