Published : 14 Apr 2016 09:17 AM
Last Updated : 14 Apr 2016 09:17 AM

எஸ்எஸ்எல்சி விருப்ப மொழித் தேர்வு 1,118 மாணவர்கள் எழுதினர்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையின மாணவர்கள் தங்கள் மொழித் தேர்வை விருப்பத் தேர்வாக எழுதிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, விருப்ப மொழித் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 1,118 மாணவர்கள் எழுதியதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். விருப்ப மொழித் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அவர்களின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x