Published : 17 Apr 2016 10:32 AM
Last Updated : 17 Apr 2016 10:32 AM

விஜயகாந்த் 2-ம் கட்ட பிரச்சாரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை கிருஷ்ணகிரியில் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளார்.

இதுபற்றி தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி வேட்பாளர்களை ஆத ரித்து விஜயகாந்த் 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டத்தில் உள்ள தொகுதிகளுக் கான வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் 18-ம் தேதி ஓசூர், தருமபுரியில் பேசுகிறார் 19-ம் தேதி வாழப்பாடி, ஓமலூரிலும் 20-ம் தேதி நாமக்கல், குளித்தலையிலும் 21-ம் தேதி வீரப் பசத்திரம், அந்தியூரிலும் பேசுகிறார்.

22-ம் தேதி காங்கேயம், உடு மலைப்பேட்டையிலும், 23-ல் குன்னூர், கோவை வடவள்ளி, சூலூரிலும் , 24-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து வேடசந்தூரிலும் மதுரை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மதுரையிலும் 25-ம் தேதி தேனி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஆண்டிப்பட்டி, திரு மங்கலத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x