Published : 15 Apr 2022 01:21 PM
Last Updated : 15 Apr 2022 01:21 PM

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருநங்கையர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கையர் திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பான தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதள பதிவு: "இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

திருநங்கையர் கண்ணியம் காத்த மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் தமிழக அரசு, திருநங்கையர் - திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x