Published : 26 Apr 2016 08:18 AM
Last Updated : 26 Apr 2016 08:18 AM

பிரச்சாரத்தை தொடங்கினார் குஷ்பு: ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டுகோள்

அமைச்சர்களைப்போல மக் களையும் அடிமைகளாக நினைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள குஷ்பு, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை ராயபுரத்தில் நேற்று மாலை தொடங்கினார். ராயபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோவை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வரும் என நம்பி வாக்களிக்காதீர்கள். மக்களின் பிரச்சினைகளை கேட்க ஜெயலலிதாவுக்கு நேரமில்லை. ‘நான் சொல்வதுதான் சரி, நான் செய்வதான் சரி’ என்று கூறும் சர்வாதிகார ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது

மக்களை நேரடியாக சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா, 2011 தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவற்றை நிறைவேற்றியதாக கூறுகிறார். பிறகு ஏன் மக்களுக்கு பணம் கொடுக்க நினைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் போலீஸார் பாதுகாப்புடன் மக்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைக்கின்றனர். எப்படி அமைச்சர்களை அடிமைகள்போல நடத்துகிறாரோ, அதேபோல மக்களும் அடிமையைப்போல இருக்க வேண்டும் என நினைக்கும் ஜெயலலி தாவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், தேர்தலில் பலமுனை போட்டி நிலவுவது குறித்துகுஷ்புவிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘யார் வேண்டுமானாலும், தேர்தலில் போட்டி யிடலாம். சிலர் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தனித்து போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ஆனால், மக்கள் யாரை தேர்ந்தெடுப்பது என தெளிவாக உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x