Published : 24 Apr 2016 11:04 AM
Last Updated : 24 Apr 2016 11:04 AM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை சென்னை ஆர்.கே.நகரில் நேற்று தொடங்கினார். அவர், தொடர்ந்து 21 நாட்கள் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
திருமாவளவனின் தேர்தல் சுற்றுப் பயணம் தொடர்பாக விசிக தலைமை யகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:
விசிக தலைவர் திருமாவளவன் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை சென்னை ஆர்.கே.நகரில் 23-ம் தேதி (நேற்று) தொடங்கி காட்டு மன்னார்கோவிலில் மே 14-ம் தேதி நிறைவு செய்கிறார். தான் போட்டி யிடும் காட்டுமன்னார்கோவில் தொகு தியில் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 5 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இதையடுத்து 29-ம் தேதி - புவனகிரி, சிதம்பரம், வளையமாதேவி, விருத் தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, லப்பைக் குடிகாடு, 30 - துறையூர், உப்பிலியாபுரம், தாப்பேட்டை (முசிறி), நாமக்கல் , ராசிபுரம், ஆத்தூர், சேலம், மே 1 - தருமபுரி, கம்மய நல்லூர், அரூர், தீர்த்தமலை, ஊத்தங் கரை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், 2 - வந்தவாசி, காஞ்சிபுரம், பெரும்புதூர், அரக் கோணம், திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரியில் பிரச்சாரம் செய்கிறார்.
3-ம் தேதி ஆர்.கே.நகர், 4 - சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், வானூர், மயிலம், 5 - புதுச்சேரி, 6 - உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், 7 - காட்டுமன்னார்கோவில், திருவிடை மருதூர், 8 - சோழவந்தான், மேலூர், காளையார்கோவில், மானாமதுரை, 9 - பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
மே 10 முதல் 14 வரை 5 நாட்களுக்கு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT