Published : 18 Apr 2016 08:04 AM
Last Updated : 18 Apr 2016 08:04 AM
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் செ.ஜோதிமணி தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறார். எனினும், நான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை. ராகுல் காந்திக்கு தேவையற்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டாமென்பதால், நான் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை. அதேசமயம், அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யமாட்டேன். பிற தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT