Published : 20 Apr 2016 08:34 AM
Last Updated : 20 Apr 2016 08:34 AM
தேசியவாத காங்கிரஸ் சார்பில், 66 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் திருச்சியில் நேற்று வெளியிடப்பட்டது.
திருச்சி கிழக்கு என்.ஜெயக்குமார், திருச்சி மேற்கு கே.பாலகிருஷ்ணன், திருவெறும்பூர் கே.கிருபாகரன் உள்ளிட்ட தமிழகத்தில் 66 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பி.சாரதி, திருச்சியில் நேற்று வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, “கட்சி தொடங்கியதில் இருந்தே நாங்கள் தனித்துதான் போட்டியிட்டு வருகிறோம். அதன்படி இந்தத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடவுள்ளோம்.
சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் ஆட்சி பீடத்துக்கு வருவது தடுக்கப்பட்டு, பிற துறையினர் ஆட்சி பீடத்துக்கு வந்தால்தான் தமிழகத்தில் நிலவும் அரசியல் கலாச்சாரம் மாறும். குறிப்பாக, அரசியல் கட்சிகள் 20 சதவீத இடங்களில் விவசாயிகளை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT