Published : 08 Apr 2016 11:00 AM
Last Updated : 08 Apr 2016 11:00 AM
அகில இந்திய மூவேந்தர் முன்னணி, மூவேந்தர் முன் னேற்றக் கழகம், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சிகள் அதிமுகவை ஆதரிப்பதாக கூறியிருந்தன. ஆனால், அதிமுக தலைமை அவர்களுக்கு சீட் ஏதும் வழங்க வில்லை. இந்த சூழலில், தேவரின அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று அஇமூமுக தலைவர் சேதுராமன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த 30 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முக்குலத்தோர் அமைப்புகளுக்கு அதிமுக முக்கியத்துவம் அளிக்க வில்லை. எனவே, அதிமுக அணியில், இனியும் தொடரக்கூடாது என்று கூறினர். எனவே, அதிமுக அணியிலிருந்து விலகுவது என்று முடிவு செய்துள்ளோம். எந்தக் கூட்டணியில் சேருவது என்பது தொடர்பாக வரும் 12-ம் தேதி அறிவிப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT