Published : 11 Apr 2016 12:24 PM
Last Updated : 11 Apr 2016 12:24 PM
தமாகாவின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன் உள்ளிட்டோர் விரைவில் காங்கிரஸில் இணைவர் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வந்தபோது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமாகாவின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன் விரைவில் காங்கிரஸில் இணைவர். மீண்டும் காங்கிரஸில் இணைய விரும்பும் தேசிய உள்ளங்களை ஏற்க தயாராக இருக்கிறோம்.
ஆனால், மதவாத கொள்கை கொண்ட பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நடத்திய ஜி.கே.வாசனை மட்டும் இனி காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
திமுக தேர்தல் அறிக்கை மிக சிறப்பானது. இலவசங்கள் இல்லாத பிரமாதமான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மூத்த தலைவர்கள் பலர் போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் அக்கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT