Published : 22 Apr 2016 12:38 PM
Last Updated : 22 Apr 2016 12:38 PM
மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகளின் பா.ம.க. வேட்பாளர்கள் மாற்றபட்டுள்ளனர்.
இது குறித்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் மாற்றம் விவரம்:
1.மயிலாப்பூர் - மீனாட்சி ஆனந்துக்கு பதிலாக என்.சுரேஷ்குமார்
2. தளி - வெ.கந்தசாமிக்கு பதிலாக அருண்ராஜன்
3. பாலக்கோடு - அ.சரவணனுக்கு பதிலாக கு.மன்னன்
4. திருத்துறைப்பூண்டி - உ.காசிநாதனுக்கு பதிலாக ச.ராஜமோகன்
வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், பாமக வேட்பாளர்கள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக உளுந்தூர்பேட்டை தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார். விஜயகாந்துக்கு எதிராக பாலு களமிறக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT