Published : 27 Apr 2016 11:55 AM
Last Updated : 27 Apr 2016 11:55 AM
திருப்பூர் வடக்கு தொகுதி தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “திமுகவை என்றைக்கும் குற்றவாளியாக்க வேண்டும் என்பது வைகோவின் வாடிக்கை. ஒரு தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஒரு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரின் சமுதாயத்துக்கும், மற்றொரு சமுதாயத்துக்கும் சண்டை வரும் என்று கருதினால், தமிழகத்தில் எந்த தொகுதியிலும் யாரும் நிற்க முடியாது.
வைகோ அளித்திருக்கும் விளக்கத்தில் நம்பகத்தன்மை இல்லை. தோல்வி அடைந்துவிடுவோம் என்பதை தெரிந்துதான், தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளார். இது, மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியைக் காட்டுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT