Published : 13 Apr 2016 09:06 AM
Last Updated : 13 Apr 2016 09:06 AM

யாருக்கு வாக்களிக்கலாம்?- பழ.நெடுமாறன் கருத்து

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: கல்வி, மருத்துவம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக்க வேண்டும். பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன், மதுவை ஒழித்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, நீதியான ஆட்சியைத் தர வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணை போனவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

முக்கியப் பிரச்சினைகளுக்குச் சட்டப்பேரவையில் குரல்கொடுக்கவும் அவற்றுக்காகத் தொடர்ந்து போராடும் உறுதியும், தமிழ்த் தேசிய உணர்வும் கொண்ட, தமிழகத்தின் நலன்களைக் காப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x