Published : 22 Feb 2022 10:51 AM
Last Updated : 22 Feb 2022 10:51 AM

நீலகிரியில் திமுக கூட்டணி முன்னிலை 

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 291 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கான வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார். முன்னிலை - வெற்றி நிலவரம்:

வார்டு-1
1.உமா நித்திய சத்தியா (காங்கிரஸ்) -638 வெற்றி
2.கனகமணி (அ.தி.மு.க.)-159
3.பூர்ணிமா (பா.ஜ.க.)-52
சுயேச்சை வேட்பாளர்கள்- 4 பேர்

வார்டு-2
1.நாகமணி (தி.மு.க.)-வெற்றி
சுயேச்சை வேட்பாளர்கள்-4 பேர்

வார்டு-3
1.கவுரம்மா (தி.மு.க) - 335
2.ஜெயலட்சுமி (அ.தி.மு.க.)- 668 வெற்றி
3.விஜயகுமாரி(பா.ஜ.க.) 59.

4வது வார்டில் திமுக வேட்பாளர் 605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திராஜ் சான்றிதழ் வழங்கினார்.

இதுதவிர, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் 3 பேரூராட்சிகளில் மட்டும் சில வார்டுகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் 3, 4ஆம் வார்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கூடலூர் நடுவட்டம் பேரூராட்சியில் மகாதேவன் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

உலிக்கல் பேரூராட்சியில் திமுக 3 வார்டுகளிலும் வெற்றி சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x