Last Updated : 19 Feb, 2022 03:24 PM

 

Published : 19 Feb 2022 03:24 PM
Last Updated : 19 Feb 2022 03:24 PM

திருச்சி அருகே பேரூராட்சி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராஜ ஆய்வு.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார். இம்மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தமுள்ள 401 வார்டுகளில், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வார்டுகளை தவிர எஞ்சிய 398 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் 21 சதவீதமும், காலை 11 மணியளவில் 29 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பிற்பகல் 1 மணியளவில் 42 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

இதன்படி, மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வார்டுகளில் மொத்தமுள்ள 10,62,590 வாக்குகளில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 4,46,288 வாக்குகள் பதிவாகியுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக பேரூராட்சியில் 51 சதவீதமும், நகராட்சியில் 55 சதவீதமும், மாநகராட்சியில் 38 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x