Published : 01 Apr 2016 08:41 AM
Last Updated : 01 Apr 2016 08:41 AM
தமிழ்நாடு பீடி, சுருட்டு மற்றும் புகை யிலை தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் சி.ஜி.ராஜாராம் தலைமையில் ஈரோடு மாவட் டம் பெருந்துறையில் நடந்தது. ஈரோடு மாவட்ட பீடித் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சின்னச்சாமி, சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆத ரவு கொடுத்து, அவர்கள் வெற்றிக்காக பீடி தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 1000 பீடிகள் சுற்ற ரூ.300 வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளில் 5 லட்சம் பீடி தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று பிரதமரிடம் அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT