Published : 24 Apr 2016 10:28 AM
Last Updated : 24 Apr 2016 10:28 AM

கொங்கு இளைஞர் பேரவையில் இருந்து தனியரசு திடீர் நீக்கம்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை பல்லாவரத்தில் உள்ள பேரவை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சி.ஆறுமுகம், தா.கார்வேந்தன் தலைமை வகித்தனர். இதில் தருமபுரி, சென்னை, நாமக்கல், திருச்சி, கோவை, தஞ்சாவூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கொங்கு இளைஞர் பேரவை தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்துக்கு விரோதமாக பேரவை அமைப்பாளர் தனியரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை.

இதனால், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்.

தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x