Published : 03 Apr 2016 10:03 AM
Last Updated : 03 Apr 2016 10:03 AM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று முன்தினம் தமிழக ஆம் ஆத்மி நிர்வாகிகளை சந்தித்து மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், வைகோவுக்கு ஆம் ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நீங்கள் கடிதம் எழுதியதற்கு நன்றி. ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. இந்தியாவில் தற்போதுள்ள அரசியல் முறையையே மாற்ற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும், கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு கடிதத்தில் சோம்நாத் பாரதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT