Published : 17 Apr 2016 10:30 AM
Last Updated : 17 Apr 2016 10:30 AM
கட்சி அனுமதித்தால், திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடுவேன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் மேலும் கூறும்போது, “வரும் 18-ம் தேதி கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின்னரே, தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரியவரும். திருவாரூர் தொகுதியில் போட்டியிட நிர்வாகி கள் கூட்டத்தில் முடிவு எடுத்தால், அங்கு போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT