Published : 19 Apr 2016 08:35 AM
Last Updated : 19 Apr 2016 08:35 AM

திருவாரூர் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து விவசாய சங்க தலைவர் போட்டி

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து, விவ சாய சங்கத் தலைவர் பி.எஸ்.மாசிலாமணி (66) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

திருவாரூர் அருகே உள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர், 11-ம் வகுப்பு வரை படித் துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளை, ஒன்றியச் செயலாளர், அனைத்திந்திய இளை ஞர் பெருமன்ற தஞ்சை மாவட் டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு களை வகித்துள்ள இவர், தற்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கிறார்.

1996 முதல் 2006 வரை மாங்குடி ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவி அல்லி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கட்சி அனுமதித்தால் கருணா நிதியை எதிர்த்துப் போட்டியிடு வேன் என்று, மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் முத்த ரசன் தெரிவித்திருந்த நிலையில், திருவாரூர் தொகுதி வேட்பாள ராக மாசிலாமணி அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x