Published : 08 Apr 2016 10:32 AM
Last Updated : 08 Apr 2016 10:32 AM

தருமபுரியில் போட்டியிட அன்புமணிக்கு கோரிக்கை

தருமபுரியில் நேற்று முன்தினம் பாமக சார்பில் ‘உங்கள் ஊர் உங்கள் அன்புமணி’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் அன்புமணியிடம் தங்களது பல்வேறு கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், ‘நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வென்றது தருமபுரி மண்ணில்தான். அதேபோல, தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கும் தருமபுரி மண்ணில்தான் போட்டியிட்டு வெல்ல வேண்டும். செங்கோட்டைக்கு எந்த மண்ணில் வென்று சென்றீர்களோ அதே மண்ணில் வென்றுதான் புனித ஜார்ஜ் கோட்டைக்கும் நீங்கள் செல்ல வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அதை ஆமோதிக்கும் வகையில் சிரித்தபடியே அன்புமணி தலையாட்டிச் சென்றார். எனவே அவர் உறுதியாக தருமபுரி மாவட்டத்தின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என அக்கட்சியினர் பேசத் தொடங்கிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x