Published : 27 Apr 2016 01:46 PM
Last Updated : 27 Apr 2016 01:46 PM

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முகுந்தனிடம் தாக்கல் செய்தார்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.அப்போது பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

விஜயகாந்த் சட்டப் பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x