Published : 14 Apr 2016 08:31 AM
Last Updated : 14 Apr 2016 08:31 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, “மக்கள் நலக் கூட்டணி தொடங்கியபோது, தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்காது என விமர்சனம் செய்யாத அரசியல் தலைவர்களே இல்லை. இப்போது, தேமுதிக, தமாகா போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருப்பதால் பெரிய கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. 6 கட்சிகள் இணைந்து தமிழக மக்களுக்கு அறுசுவை விருந்தை பரிமாறுவோம்.
தமிழகத்தில் லஞ்சம், லாவண்யம் பெருகிவிட்டது. இதுவரை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள்தான் இதற்கு காரணம் என்பதை மக்கள் அறிவார்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குறுதிகளை அறிவிக்கும் திராவிடக்கட்சிகள் அதை நிறைவேற்றி இருக்கின்றனவா? மக்கள் நலக் கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே வழங்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT