Published : 01 Apr 2016 07:37 AM
Last Updated : 01 Apr 2016 07:37 AM
தமிழகம், புதுச்சேரி, கேரளா வில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
ஏப்ரல் 4 முதல் மே 16 வரை தேர்தல் வாக்குக் கணிப்புகள் நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துவதை தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஏப்ரல் 4-ம் தேதி காலை 7 மணி முதல், மே 16-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் வாக்குக் கணிப்பு (Exit Poll) நடத்துவது, வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.
அதேபோல, தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த நேரத்தில் இருந்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகளை (Opinion Poll) வெளியிடுவதும் தடை செய்யப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா வில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2.73 லட்சம் புகார்கள்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக நேற்று வரை 2.73 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. விதிமீறல் தொடர்பாக பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனைகளில் ரூ.16.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT