Published : 29 Apr 2016 09:27 AM
Last Updated : 29 Apr 2016 09:27 AM
தேர்தல் வெற்றிக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் நேற்று யாகம் நடந்தது.
புதுச்சேரியில், என்.ஆர்.காங் கிரஸ் கட்சி சார்பில் 21 தொகுதி களுக்கு வேட்பாளர்களை முதல் வர் ரங்கசாமி முதற்கட்டமாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலாசு பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு யாகம் தொடங்கியது.
இரவு சுமார் 10 மணி வரை இந்த யாகம் நடைபெற்றது. நள்ளிரவில் அது நிறுத்தப்பட்டு, மீண்டும் நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் தொடங்கியது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 10.30 வரை இந்த யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தின்போது பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டன.
“யாகத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார். புதுச்சேரியில் உள்ள 5 சிவாச்சார்யார்கள் மற்றும் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட 15 சிவாச்சார்யார்கள் இந்த யாகத்தை நடத்தினர். இதில் சுதர்சன ஹோமம், மகா சண்டி ஹோமம் மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. நடைபெற உள்ள தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி வெல்லவே முதல்வர் ரங்கசாமி இந்த யாகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். கட்சியினர், வேட்பாளர்கள் என பலரும் அதில் பங்கேற்றனர்” என்று என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT